தனுஷ்கவின் 2 ஆவது பிணை மனு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

ஆசிரியர் - Editor II
தனுஷ்கவின் 2 ஆவது பிணை மனு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

அவுஸ்திரேலியா நாட்டின் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் வெளிவருவதற்கான இரண்டாவது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்தார்.  தனுஷ்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். நியூ சௌத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்றத்தில்  தனுஷ்கவின் புதிய பிணை மனுவை தாக்கல் செய்த சட்டத்தரணிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

இப்பிணை மனு மீதான விசாரணை டிசெம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு