யாழ்.கல்வியங்காட்டில் வீதியால் பயணித்த வயோதிப பெண்ணிடம் வழிப்பறி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் வீதியால் பயணித்த வயோதிப பெண்ணிடம் வழிப்பறி!

யாழ்.கல்வியங்காடு - ஜீ.பி.எஸ் ஒழுங்கையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயோதிப பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்ற மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென வழிமறித்து 1 பவுண் நிறையுடைய தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக 55 வயதான பாதிக்கப்பட்ட பெண் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள சீ.சி.ரீ.வி காட்சிகளை பெற்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு