திருமணம் செய்யுமாறு வர்புறுத்தல்!! -காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்-

ஆசிரியர் - Editor II
திருமணம் செய்யுமாறு வர்புறுத்தல்!! -காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்-

இந்தியா – புதடெல்லியில் காதலியை கொலை செய்து அவரின் உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்த ஷிரத்தாவுக்கும், அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். 

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் ஷிரத்தாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மும்பையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இருவரும் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் அப்தாப் அமினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷிரத்தா வலியுறுத்தினார். ஆனால் அதை அப்தாப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தினமும் வாக்குவாரம் ஏற்பட்டது. 

திருமணம் செய்யுமாறு வர்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். இந்நிiலியல் அப்தாப் ஆத்திரத்தில் ஷிரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பின் உடலை 35 துண்டுதுண்டாக வெட்டினார். 

அந்த உடல் பாகங்களை ஒரே சமயத்தில் வெளியே எடுத்துச்சென்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் ஒவ்வொரு துண்டுகளாக வெளியில் எடுத்துச் சென்று வீசியுள்ளார். 

ஷிரத்தாவுடன் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அது முடியாமல் போனதால் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு