ரி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி!! -நாணயசுழல்ச்சில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு-

ஆசிரியர் - Editor II
ரி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி!! -நாணயசுழல்ச்சில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு-

ரி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சற்று முன்னர் நடந்நத நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ரிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2009 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு உலக கோப்பையை உச்சி முகர்ந்த இங்கிலாந்து அணி 3 ஆவது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில், கோப்பைக்கான இந்த போட்டியில் நாணயசுழல்ச்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு