லண்டனில் உச்சம்தொட்ட உணவுப்பொருட்களின் விலை!! -ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
லண்டனில் உச்சம்தொட்ட உணவுப்பொருட்களின் விலை!! -ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை-

வல்லரசு நாடான இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவுப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் தற்போது பால் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.

இதற்கமைய, முன்பதிவு செய்து உணவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் உணவு வங்கி மேலாளரொருவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு