தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்!! -சாதித்த வவுனியா மாணவிகள்-

ஆசிரியர் - Editor II
தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்!! -சாதித்த வவுனியா மாணவிகள்-

பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா மாவட்ட பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெற்றுள்ளனர். 

இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் இம்மாதம் 10, 11 ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி மூன்றாம் இடத்தையும், பா.செரோண்யா பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த மாணவிகள் வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவனின் நெறிப்படுத்தலிலேயே தயார்ப்படுத்தப்பட்டு பளு தூக்கும் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை தனதாக்கிக்கொண்டுள்ளனர். 

அண்மைக் காலமாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு