வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் நியமனம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் நியமனம்..

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற முன்னாள் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் 

இன்று (11) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் 

மூவரின் பதவிகள் வறிதான நிலையில் தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவரான வேதநாயகன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னர் அரச அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் மற்றுமொரு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு