பட்லர் - அலெக்ஸ் அதிரடி!! -இந்தியாவை மண்டியிட வைத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து-

ஆசிரியர் - Editor II
பட்லர் - அலெக்ஸ் அதிரடி!! -இந்தியாவை மண்டியிட வைத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து-

ரி-20 உலக கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீடத்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இத் தொடரின் 2 ஆவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 168 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக கார்த்திக் பாண்ட்யா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

இதனையடுத்து 169 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர். 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. 


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு