தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை...

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை...

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடங்களை பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, 

அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், 

எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு