களத்தடுப்பில் முழு சுதப்பல்!! -நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்-

ஆசிரியர் - Editor II
களத்தடுப்பில் முழு சுதப்பல்!! -நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்-

ரி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று புதன்கிழமை முதல் அரையிறுதி போட்டியில் மோதின. 

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ஓட்டங்களை எடுத்தது. 

இதனையடுத்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ஓட்டத்துடன் படியெடுப்பு நழுவ விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ஓட்டங்கள் குவித்தது.  பாபர் அசாம் 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 படையெடுப்புகாளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு