தனுஷ்க மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆவணங்களில் முரண்பாடு!! -இன்றும் மீண்டும் வழக்கு விசாரணைக்கு-

ஆசிரியர் - Editor II
தனுஷ்க மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆவணங்களில் முரண்பாடு!! -இன்றும் மீண்டும் வழக்கு விசாரணைக்கு-

தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முரண்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாக அவர் மீதான வழக்கு இன்று புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியன் வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு