தனுஷ்க குறித்து விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு நியமனம்

ஆசிரியர் - Editor II
தனுஷ்க குறித்து விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு நியமனம்

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி அவுஸ்திரேலியாவில் சிறை தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள என்று இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். 

இதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும்  அசேல ரகவே உள்ளடங்கிய குழு இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் மற்றும் வீரர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிகெட் அணியின் அதிகாரிகள் உட்பட எவரேனும் பொறுப்பை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு