பயிற்சியின்போது ரோகித்துக்கு கையில் காயம்!! -அரை இறுதியில் விளையாடுவது சந்தேகம்-

ஆசிரியர் - Editor II
பயிற்சியின்போது ரோகித்துக்கு கையில் காயம்!! -அரை இறுதியில் விளையாடுவது சந்தேகம்-

இந்திய அணி வீரர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ரோகித்துக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

ரி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.

வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார். இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு