தனுஷ்கா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கினார்? -ஆணுறையால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் : வெளியானது புதிய தகவல்கள்-

ஆசிரியர் - Editor II
தனுஷ்கா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கினார்? -ஆணுறையால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் : வெளியானது புதிய தகவல்கள்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கிக் கொண்டார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக தனுஷ்கா குணதிலகாவுக்கும் அவுஸ்ரேலியா பெண்ணுக்கும் இடையில் படுக்கை அறையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவுஸ்ரேலியா பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை பொலிஸ் அதிகாரி ஜேன் டோஹர்ட்டி கூறியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குணதிலகாவும், பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணும் ஒரு 'டேட்டிங் ஆப்' மூலமாக அறிமுகமாகி உள்ளனர். சில வாரங்களாக இருவரும் அதில் உரையாடி வந்தனர்.

கடந்த 2 ஆம் திகதி இரவு, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு பாரில் இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, சிட்னியின் ரோஸ் பே பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்வது என்றும், அங்கு பாலியல் உறவில் ஈடுபடுவது என்றும் இருவரும் ஒருமனதாக முடிவு செய்தனர். அதுபோல், அந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கு படுக்கை அறையில் இருவருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. ஆணுறை அணிந்து பாலியல் உறவில் ஈடுபடுமாறு இளம்பெண் வற்புறுத்தினார். ஆனால், அதற்கு குணதிலகா மறுத்தார். இதனால் வாக்குவாதம் எழுந்தது.

ஒருகட்டத்தில், குணதிலகா, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்தார். பாலியல் பலாத்காரம் செய்தார். அதைத்தொடர்ந்து, இளம்பெண் பொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குணதிலகா அவர் தங்கி இருந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு