தனுஷ்கவுக்கு மீண்டும் பிணை மறுப்பு!! -தொடர்ந்தும் பொலிஸ் தடுப்பு காவலில்-

ஆசிரியர் - Editor II
தனுஷ்கவுக்கு மீண்டும் பிணை மறுப்பு!! -தொடர்ந்தும் பொலிஸ் தடுப்பு காவலில்-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கை அவுஸ்திரேலியா நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மீண்டும் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக தொடர்ந்தும் பொலிஸாரின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவர் மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் தனுஷ்க குணதிலக்க நீதின்றில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தனுஷ்க குணதிலக அந்நாட்டில் உள்ள ஒரு திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு