“சுள்ளான்” திருட்டு குழு தலைவர் 5 உதவியாளர்களுடன் கைது! பெருமளவு பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
“சுள்ளான்” திருட்டு குழு தலைவர் 5 உதவியாளர்களுடன் கைது! பெருமளவு பொருட்களும் மீட்பு..

பல வீடுகளில் புகுந்து தொடர்ச்சியான திருட்டில் ஈடுபட்டுவந்த “சுள்ளான்” திருட்டு குழுவின் தலைவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் சுள்ளான் குழு தலைவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அவரிடமிருந்து திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக 

தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலிஸார் சம்பவதினமான நேற்று காலை திருட்டுக் கும்பலின் தலைவர் சுள்ளான் 

மற்றும் 5 பேர் உட்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு