பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு!! -அவுஸ்ரேலியாவில் தனுஷ்க கைது: பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு-

ஆசிரியர் - Editor II
பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு!! -அவுஸ்ரேலியாவில் தனுஷ்க கைது: பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு-

அவுஸ்திரேலிய நாட்டின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில்  31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றச்சாட்டுக்களை பரிசீலனை செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். 

சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு