யாழ்.பல்கலைகழக துணைவேந்தருக்கு எதிராக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக துணைவேந்தருக்கு எதிராக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்!

யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சி.சற்குணராஜா தன்னை பழிவாங்கப்போவதாக கூறியுள்ளார் என குற்றஞ்சாட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக 

துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்லைக்கழக மாணவரின் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் அதுதொடர்பில் ஆய்ந்து வருவதாகவும் 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு