யாழ்.ஊரெழுவில் விடுதி ஒன்றின் காவலாளியான இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழுவில் விடுதி ஒன்றின் காவலாளியான இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.ஊரெழு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட குழு இளைஞன் மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த இளைஞன் தனியார் விடுதியில் காவலராக கடமைபுரிந்து வரும் நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இனைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிந்துயன் 

என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு