யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற “யாழ்தேவி” தடம்புரண்டு விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற “யாழ்தேவி” தடம்புரண்டு விபத்து!

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த “யாழ்தேவி” புகைரதம் இன்று மாலை வவுனியா - மதவாச்சி இடையே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளுக்கு பாதிப்பில்லை எனவும் கூறப்படுகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு