யாழ்.சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் சங்கிலியை திருடிக்கொண்டு வவுனியா பயணமான திருடன்! ஒரு மணித்தியாலத்திற்குள் மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் சங்கிலியை திருடிக்கொண்டு வவுனியா பயணமான திருடன்! ஒரு மணித்தியாலத்திற்குள் மடக்கியது பொலிஸ்..

யாழ்.சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற நபர் ஒரு மணி நேரத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு சென்றிருந்த நபர் ஒருவர், 

அங்கு சங்கிலி வாங்கப்போவதாக பாசாங்கு செய்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

நகை திருடப்பட்டதை ஒரு சில நிமிடங்களில் கண்டுபிடித்த கடை உரிமையாளர் தனது உதவியாளரை அழைத்து திருடனை கண்டுபிடித்து பின் தொடருமாறு கூறியதுடன், 

சாவகச்சோி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். தகவலையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் திருடிய சங்கிலியுடன் வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த திருடனை மடக்கி பிடித்துள்ளனர். 

திருட்டு நடைபெற்று ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் துரித நடவடிக்கையால் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு