டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்.பருத்தித்துறை - அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது 63) என்ற பெண்ணுக்கு கடந்த திங்கள் கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

மறுநாள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் புதன் கிழமை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் நேற்ற காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு