யாழ்.மாவட்டத்தில் பாண் விலை குறைக்கப்படுமா? மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாண் விலை குறைக்கப்படுமா? மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் பாண் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து சங்கத்தின் செயலாளர் கருத்து தொிவிக்கையில், ஏனைய மாவட்டங்களில் பாண் 1 இறாத்தால் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர். 

எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண் விலையை கட்டுப்படுத்தி 200 ரூபாவிற்குள் விற்க சம்மதித்தோம். 

எனவே தற்போதைய 10 ரூபா விலைகுறைப்பை செய்யமுடியவில்லை. கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் ஆகியன 

மாவின் விலையை குறைதால் நாமும் பாண் விலையை குறைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு