யாழ்.அச்சுவேலியில் வீதியால் சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை! காதை கிழித்து தோட்டை பிடுங்கிய குரூரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் வீதியால் சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை! காதை கிழித்து தோட்டை பிடுங்கிய குரூரம்..

யாழ்.அச்சுவேலி ஆஸ்பத்திரி வீதியில் 3 பெண்களிடம் கத்திமுனையல் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றிருப்பதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

3 பெண்கள் வீதியால் நடந்து சென்றபோது அவர்களிடம் விலாசம் கேட்டு விசாரிப்பதுபோல் பாசாங்கு செய்த இருவர் சிறிது நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டி ஒருவருடைய தங்க சங்கிலி மற்றும் ஒரு கவரிங் சங்கிலி ஆகியவற்றை பறித்ததுடன்,

மற்றொரு பெண் அணிந்திருந்த தோட்டை இழுத்து பிடுங்கியுள்ளனர். இதனால் காது கிழந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு