யாழ்.வலி,வடக்கில் தொடரும் நில அபகரிப்பை எதிர்த்து பேரெழுச்சி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் தொடரும் நில அபகரிப்பை எதிர்த்து பேரெழுச்சி..!

யாழ்.வலி,வடக்கில் தொடரும் நில அபகரிப்புகளை கண்டித்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இன்று காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வட கிழக்கில் காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இதை தடுத்து நிறுத்தப்படவேண்டும். 

எனவும், வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது உள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,

அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், 

இன்றைய தினம் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு