ஹசறங்கவின் சுழல் மாயம்: தனஞ்செய டி சில்வாவின் அதிரடி -ஆப்கானை இலகுவா வென்றது இலங்கை-

ஆசிரியர் - Editor II
ஹசறங்கவின் சுழல் மாயம்: தனஞ்செய டி சில்வாவின் அதிரடி -ஆப்கானை இலகுவா வென்றது இலங்கை-

வனிந்து ஹசறங்க சுழல் மாயம் செய்ய, தனஞ்செய டி சில்வாவின் அதிரடி அதிரடி காட்ட ஆப்பாகிஸ்தானை கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கிய இலங்கை அணி இலகுவாக வெற்றி கொண்டது.

குழு 1 இல் உள்ள ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான ரி-20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுப் போட்டி இன்று காலை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. 

இதில் நாயணசுழல்ச்சினில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றது. 

சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹசறங்க 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை பொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து, இலங்கை அணி 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. 

இதில் தனஞ்செய டி சில்வா பொறுப்புடன் விளையாட 42 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றார். போட்டியில் ஆட்டநாயகனாக வனிந்து ஹசறங்க தெரிவானார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு