பொதுஜன பெரமுன ஆதரவாளர் என கூறி பொலிஸ் உத்தியோகஸ்த்தரை மிரட்டிய எடுபிடி!!

ஆசிரியர் - Editor I
பொதுஜன பெரமுன ஆதரவாளர் என கூறி பொலிஸ் உத்தியோகஸ்த்தரை மிரட்டிய எடுபிடி!!

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் என கூறிக்கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தரை அச்சுறுத்திய நபருக்கு எதிரான யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை  தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய குறித்த உறுப்பினர், மாவட்ட அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறும் அழைத்துள்ளார். 

விசாரணைக்கு வருகை தராத பட்சத்தில் வட மாகாண மூத்த பொலிஸ் அதிகாரியை கொண்டு இடமாற்றம் செய்வேன் என்று அச்சுறுத்தியுள்ளார். இதனால் தனது கடமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி பொலிஸ் உத்தியோகத்தர்

தனக்கு தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு