வடமாகாணத்தில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்! நீதி அமைச்சர் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்! நீதி அமைச்சர் உத்தரவாதம்..

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியுள்ளார். 

மாகாணத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது முப்படை தளபதிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கடல் மற்றும் தரை பகுதிகளில் போதைப் பொருள் விநியோகத்தை தடுக்க

மத்திய அரசாங்கத்திடமிருந்து தேவையான சகல ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு