கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 23 வயதான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 23 வயதான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்!

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 23 வயதான கடல் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

கடந்த 29 ஆம் திகதி காலை கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று (30) காலை கொக்குளாய் கடற்கரையில் காணாமல் போன மீனவரின் சடலம் கரைஒதுங்கியுள்ளது.

சடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதன்போது 23 வயதையுடைய மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு