யாழ்.மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் 32ம் ஆண்டு நினைவுகூரல் யாழில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் 32ம் ஆண்டு நினைவுகூரல் யாழில்..

யாழ்.மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 32ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை யாழ்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. 

வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் அவலநினைவலைகள் பகிரப்பட்ட தோடு, இதுவரை குறைந்தளவான முஸ்லீம் குடும்பங்களே மீள்குடியேறியதாகவும் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு இதுவரை பல அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யபடவில்லை எனவும் சுட்டிகாட்டப்பட்டது.

இதன்போது யாழ் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளியின் தலைவர் சரவுல்அனாம், மௌலவி ஹக்கீம் ,மௌலவி அலியார் பைசர் காசிமி, யாழ் முஸ்லீம் ஒன்றிய தலைவர் ஆறிப் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு