நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்..!

ஆசிரியர் - Editor I
நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்..!

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி மா.இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாவது தமிழர் என்ற பெருமைகுறித்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

நீதித்துறையில் கடந்த 25 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியன் பணியாற்றி வருகின்றார்.

இவர் மேல் நீதிமன்ற நிதிபதியாக வடக்கு - கிழக்கின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார். 

திருகோணமலையில் ஏழரை வருடங்கள், கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள், யாழ்ப்பாணத்தில் மூன்றரை ஆண்டுகள், 

வவுனியா ஓராண்டு, மட்டக்களப்பு சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றில் ஓராண்டு என மொத்த 12 ஆண்டுகள் மேல் நீதிமன்றில் கடமையாற்றுகிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு