சிறைகளில் உள்ள எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர்! நீதியமைச்சர் யாழ்ப்பாணத்தில் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
சிறைகளில் உள்ள எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர்! நீதியமைச்சர் யாழ்ப்பாணத்தில் உத்தரவாதம்..

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை இன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

குறித்த சந்திப்பில் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில்எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு உறவினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம்.

அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

என நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார். குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் நண்பர் கருணாகரன், 

அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு