யாழ்.காரைநகரில் வீடு கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டும்போது காத்திருந்த அதிர்ச்சி!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் வீடு கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டும்போது காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்.காரைநகரில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டும்போது வெடிக்காத நிலையில் ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் நேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக தொியவருகின்றது. 

காணியில் உரிமையாளர் குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியவேளை குழியில் இருந்து குண்டு வெளிப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு