சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரிசங்கரி தவராசாவின் 1ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரிசங்கரி தவராசாவின் 1ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்...

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரிசங்கரி தவராசாவின் 1ம் வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய 

"கௌரி நீதியின் குரல்" புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் மனைவியாவார்.

அத்துடன் நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு