இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை!! -கோவை கார் வெடிப்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்-

ஆசிரியர் - Editor II
இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை!! -கோவை கார் வெடிப்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்-

கோவை கார் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதன்படி இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் திகதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

இதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் பெரோஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபியாக இருக்கலாம் என கோவை காவல் துறையினர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250ற்க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் நடந்த இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து ஜக்ரன் ஹசீமுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களில் பலரிடம் அவர் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக முகமது அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது அசாருதீன் தற்போது கேரளாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு