யாழ்.பருத்தித்துறை இ.போ.ச சாலை ஊழியர்களுக்கிடையில் அடிதடி/களேபரம்! 11 ஊழியர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை இ.போ.ச சாலை ஊழியர்களுக்கிடையில் அடிதடி/களேபரம்! 11 ஊழியர்கள் கைது..

இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய பருத்தித்துறை சாலை முகாமையாளர் மீண்டும் அவரது தலைமை அதிகாரியின் பணிப்பின் பெயரில், பருத்தித்துறை சாலைக்கு கடமைக்காக சென்ற வேளை

சாலை முகாமையாளர் மற்றும் எதிர் அணிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு தரப்பினரும், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். 

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாலை முகாமையாளர் உட்பட நால்வரும், எதிரானவர்கள் என சொல்லப்பட்டவர்கள் 7 பேரும் என 11 பேர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு