பூமியை மிக வேகமாக நெருங்கிவரும் சிறுகோள்!!! -எச்சரிக்கும் விஞ்ஞானிகள்-

ஆசிரியர் - Editor II
பூமியை மிக வேகமாக நெருங்கிவரும் சிறுகோள்!!! -எச்சரிக்கும் விஞ்ஞானிகள்-

பூமியை நோக்கி வரும் 'பைத்தான்' என்னும் ராட்சத சிறுகோளின் வேகம் மேலும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை இலட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. அந்த வகையில், 'பைத்தான்' என்ற ராட்சத சிறுகோள் பூமியை நோக்கி மிக வேகமாக வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிறுகோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் உள்ளதால், கிரேக்க புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான 'பைத்தான்' என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த ராட்சத சிறுகோளானது வருகிற 2028 ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் 'பைத்தான்' ராட்சத சிறுகோள் கடந்து செல்ல உள்ளதால் இது 'டெஸ்டினி பிளஸ்' என்ற விண்கலத்தின் கண்காணிப்பில் உள்ளது.

இந்த நிலையில், 'பைத்தான்' ராட்சத சிறுகோளின் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் சுழற்சி வேகமானது நான்கு மில்லி விநாடிகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு