யாழ்.மூளாயில் திருடப்போன வீட்டில் உல்லாசமாக இருந்த திருடர்கள்! ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், மற்றையவர் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மூளாயில் திருடப்போன வீட்டில் உல்லாசமாக இருந்த திருடர்கள்! ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், மற்றையவர் தப்பி ஓட்டம்..

யாழ்.மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடொன்றில் திருடர்கள் சென்றிருந்த திருடன் அந்த வீட்டிலேயே இருந்து சாராயம் குடித்து, சமைத்துச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கிய நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிடியுள்ளனர். எனினும் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தபோதும் மற்றையவர் தப்பி ஓடியுள்ளார். 

இன்று காலை இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிடச் சென்ற இருவர், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்துச் சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு வந்து, திருடர்களை கண்டதும் அயலவர்களை அழைத்துள்ளார். இதன்போது அயலவர்கள் வருவதையறிந்து ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றையவர் கிராமவாசிகளின் கைகளில் அகப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். 

மக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.மூளாய் வேரம் பகுதியை சேர்ந்த கொள்ளையர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சுன்னாகத்தினை சேர்ந்தவர் மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தப்பித்துச் சென்றவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும், திறந்த பிடியாணையொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு