குடும்ப தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட வயோதிப பெண்! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
குடும்ப தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட வயோதிப பெண்! ஒருவர் கைது..

வீட்டிலிருந்த இருவருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் மட்டக்களப்ப, கல்குடா - பட்டியடிச்சேனை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று(25) முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் இன்று(25) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ல்குடா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு