யாழ்.இளவாலையில் நிறைபோதையில் தனியார் பேருந்தை ஓட்டிய சாரதி வீதியால் நடந்து சென்ற இளைஞனை மோதி தள்ளிய சம்பவம்! தப்பி ஓடியும் துரத்தி பிடித்த மக்கள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் நிறைபோதையில் தனியார் பேருந்தை ஓட்டிய சாரதி வீதியால் நடந்து சென்ற இளைஞனை மோதி தள்ளிய சம்பவம்! தப்பி ஓடியும் துரத்தி பிடித்த மக்கள்...

யாழ்.இளவாலை - சேந்தான்குளம் வசந்தபுரம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற இளைஞனை மோதிய தனியார் பேருந்து தப்பி ஓடிய நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, சம்பவத்தில் நோபேட் நிலக்ஸன் வயது 19 என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

கீரிமலை பிரதான வீதியில் சேந்தாங்குளம் பகுதியில் தனது வீடு நோக்கி நடந்து சென்ற கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

இளைஞன் காயமடைந்து பொதுமக்களால் மீட்கப்பட்டான். இந்நிலையில் தப்பி ஓடிய பேருந்தை கிராம மக்கள் துரத்தி பிடித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பேருந்தை கைப்பற்றியதுடன், 

50 வயதான சாரதியை கைது செய்துள்ளனர். இதன்போது பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேருந்து சாரதி நிறைபோதையில் பேருந்தை ஓட்டியமை தொியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு