அடுத்த வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை அணி? -அவுஸ்திரேலியாவுடன் இன்று மோதல்-

ஆசிரியர் - Editor II
அடுத்த வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை அணி? -அவுஸ்திரேலியாவுடன் இன்று மோதல்-

ரி-20 உலகக் கோப்பை தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. 

இத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1 இல் இடம்பிடித்துள்ள அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

அவுஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு முன்னேற் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு