ஆட்டோ மீது டிப்பர் மோதி கோர விபத்து! தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலி, தந்தையும் மற்றொரு மகனும் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஆட்டோ மீது டிப்பர் மோதி கோர விபத்து! தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலி, தந்தையும் மற்றொரு மகனும் படுகாயம்..

ஆட்டோ மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையும் மற்றொரு மகனும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து 

பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு