யாழ்.மல்லாகம் சந்தியில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் நல்லுார் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகம் சந்தியில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் நல்லுார் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 3 பேர் கைது..

யாழ்.மல்லாகம் பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 பேர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பிரதான பொலிஸ் பரிசோதகர் மதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 23, 25 வயது உடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 50 மில்லி கிராம் 60 மில்லி கிராம் 65 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் நல்லூர் மற்றும் கொக்குவில் - குளப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களை இன்று  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இவர்கள் தெல்லிப்பளைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு