யாழ்.நவாலி - கல்லுண்டாய் பகுதியில் 13 வயது சிறுமி மீது தொடர் பலாத்காரம்! ஊர் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாயின் காதலன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலி - கல்லுண்டாய் பகுதியில் 13 வயது சிறுமி மீது தொடர் பலாத்காரம்! ஊர் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாயின் காதலன் கைது..

யாழ்.நவாலி - கல்லுண்டாய் பகுதியில் 13 வயது சிறுமியை தொடர் துஷ்பிரயோகம் செய்துவந்த குற்றச்சாட்டில் 41 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான உறவு காணப்பட்டது. இந்நிலையில் சந்தேகநபர் சிறுமியுடனும் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸாரால் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு