யாழ்.நீர்வேலியில் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில் மேசன் வேலை செய்துகொண்டிருந்த கரவெட்டி இளைஞன் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில் மேசன் வேலை செய்துகொண்டிருந்த கரவெட்டி இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்.நீர்வேலி பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடொன்றிலிருந்து 27 வயதான இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 

சடலம் யாழ்.போதனாவைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு