வடமாகாணத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை! 22 அல்லது 23ம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் தாக்கும் அபாயம் - நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை! 22 அல்லது 23ம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் தாக்கும் அபாயம் - நா.பிரதீபராஜா..

முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி நாளை 20ம் திகதி தாழமுக்கமாக மாறும் வாய்ப்பக்கள் உள்ளதாக கூறியுள்ள யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, 

இது மேலும் விருத்தியடைந்து 22.10.2022 அல்லது 23.10.2022 அளவில் நடுத்தர அளவிலான புயலாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. இது புயலாக மாறினால் வடக்கு வடகிழக்கு திசை நோக்கியே ( இந்தியாவின் ஒடிசா அல்லது மேற்கு வங்கம்) நகரும் வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக இன்று இரவு முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு வெப்பச் சலன செயற்பாடும் காணப்படுகிறது. 

எனவே கடுமையான இடிமின்னல் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு. குறிப்பாக இன்று (19) யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவும் கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு