7 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்!!

ஆசிரியர் - Editor II
7 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்!!

இந்திய டெல்லியில் ஏழு மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் – டெல்லி அமைந்துள்ள நொய்டா நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை கட்டடவேலை நடைபெற்றது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர்.

தம்பதி தங்கள் குழந்தையை கட்டட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு வேலை செய்துவந்தனர். அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது. 

தெருநாய் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டது. ஆனால், தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு