தொலைபேசி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை அடகுவைத்து போதைப் பொருள் பெறுவர்கள்! யாழ்ப்பாணத்தில் கைதான போதை வியாபாரிகள் வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
தொலைபேசி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை அடகுவைத்து போதைப் பொருள் பெறுவர்கள்! யாழ்ப்பாணத்தில் கைதான போதை வியாபாரிகள் வாக்குமூலம்..

போதைப் பொருள் வாங்க பணம் இல்லாவிட்டால் அவர்களின் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற பெறுமதியான பொருட்களை அடகுவைத்து போதைப் பொருள் வாங்குவார்கள் என யாழ்.பொம்மைவெளியில் கைதான போதைப் பொருள் வியாபாரிகள் பொலிஸாருக்க வழங்கிய வாங்குமூலத்தில் தொிவித்திருக்கின்றனர். 

யாழ்.பொம்மை வெளி பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபரிகள் தொடர்பிலான இரகசிய தகவல் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்றமையை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர்களிடம் போதைப்பொருளை வாங்க வருவோர் பண பற்றாக்குறை ஏற்பட்டால், தமது கையடக்க தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகு வைத்து போதை பொருளை வாங்கி செல்வார்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதன் அடிப்படையில் போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக்க தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் என்பனவும் , பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு