பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய வயோதிப பெண் பெருமளவு நகைகளுடன் கைது! யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய வயோதிப பெண் பெருமளவு நகைகளுடன் கைது! யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சம்பவம்..

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய வயோதிப பெண் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வயோதிப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் குறித்த வயோதிப பெண்ணுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர் ஊரிக்காடு நாவலடி பகுதியைச் சேர்ந்த 55 வயது உடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தாலி, ஒரு கிராம் 630 மஞ்சாடி நிறையுடைய தோடு, 625 மில்லி கிராம் நிறையுடைய பஞ்சாயுத பென்டன், என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், 

வங்கிகளில் அடகு வைத்ததாக கூறப்படும் நகை ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

அவரை பருதித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு