யாழ்.மானிப்பாயில் வீடு உடைத்துக் கொள்ளை சந்தேகநபர்கள் இருவரை மடக்கியது பொலிஸ்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் வீடு உடைத்துக் கொள்ளை சந்தேகநபர்கள் இருவரை மடக்கியது பொலிஸ்!

யாழ்.மானிப்பாய் - கட்டுடை பகுதியில் வீடு ஒன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டுடன் தொடர்படைய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஒரு இலட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 

அவர்களிடம் இருந்து 7 பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளதாகவும் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு